Sunday, 27 November 2016


இஸ்லாமிய வினா விடை 


💐💐💐 கேள்வி 1 💐💐💐: அடிமைப் பெண்ணுக்கு அழகிய முறையில் கல்வியும் ஒழுக்கும் கற்பித்து, அவளையே திருமணம் செய்து கொண்டவருக்கு கிடைக்கும் கூலி எவ்வளவு?
        
பதில் : இரண்டு தடவை கூலி வழங்கப்படும் (ஆதாரம் :புகாரி 3011)
  
💐💐💐 கேள்வி 2. 💐💐💐 சொர்கவாசிகள் முதலில் உண்ணும் உணவு எது?
   
பதில் :  பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப்படியான சதை  (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) - நூல் : புகாரி).
  
💐💐💐 கேள்வி 3 💐💐💐. மறுமை நாளில் சொர்க்கத்தின் கதவை முதன் முதலில் தட்டுபவர் யார்?
  
 நபி (ஸல்) அவர்கள்.  (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) - நூல் : முஸ்லிம்).
  
💐💐💐 கேள்வி 4 💐💐💐. மறுமை நாளில் முதலில் பரிந்துரை செய்பவர் யார்?
  
பதில் நபி (ஸல்) அவர்கள்.  (அறிவிப்பவர்கள்: அபூஹுரைரா (ரலி), அனஸ் (ரலி) - நூல் : முஸ்லிம்).
  
💐💐💐 கேள்வி 5. 💐💐💐 நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின், நபியவர்களின் மனைவியரில் முதன் முதலில் மரணித்தவர் யார்?
  
 பதில் . ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள்.  (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) - நூல்கள் : புகாரி, முஸ்லிம்).
  
💐💐💐 கேள்வி. 6 💐💐💐
சொர்க்கத்தில் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது உணவு எது?
    
பதில் சொர்க்கத்தின் ஓரங்களில் மேய்ந்துகொண்டிருக்கும் காளை  மாடு  அவர்களுக்காக  அறு(க்கப்பட்டு விருந்தளி)க்கப்படும்.  (அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி) - நூல்: முஸ்லிம்).

💐💐💐 கேள்வி7.💐💐💐  மறுமை நாளில் முதன் முதலில் ஆடை அணிவிக்கப்படுபவர் யார்?
   
பதில் இப்ராஹீம் (அலை) அவர்கள்.  (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) - நூல்: புகாரி).

💐💐💐 கேள்வி 8 💐💐💐. மறுமையில் முதன் முதலில் விசாரிக்கப்படும் சமுதாயம் யாருடைய சமுதாயம்?

  பதில் நபி (ஸல்) அவர்களின் சமுதாயத்தினர்.  (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - நூல்: முஸ்லிம்).  (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) - நூல்: இப்னு மாஜா).

💐💐💐 கேள்வி 9 💐💐💐. முதன் முதலில் ஸம்ஸம் நீரைக் குடித்தவர் யார்?
    
பதில் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மனைவி ஹாஜரா (அலை) அவர்கள்.   (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) - நூல்: புகாரி).

💐💐💐 கேள்வி 10. 💐💐💐 : மறுமைநாளில் யாரை எதிரான சாட்சியாக அல்லாஹ் ஆக்குவான்?
  
 பதில் : ஒவ்வொரு சமுதாயத்திலும் அவர்களிலிருந்தே அவர்களுக்கு எதிரான சாட்சியை ஆக்குவான் (அல்குர்ஆன் 16:89)




No comments:

Post a Comment