Monday, 21 November 2016

அஸ்லாமு அலைக்கும் வரஹ் ....

இஸ்லாம் வினா விடை
கேள்வி பதில் நாள் 238

கேள்வி::1⃣👇👇👇

 என் இறைவா இறந்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காட்டுவாயாக என்று அல்லாஹ்விடம் வேண்டிய இறைத்தூதர் யார்::???

.🎈🎈 பதில் ::👇👇👇

#இப்ராஹிம் நபி

ஆதாரம்

அல்குர்ஆன்  2:260

♧♧♧♧♧♧♧
//////////////

.🎈🎈கேள்வி ::2⃣👇👇👇

இவ்வுலகம் இறைநம்பிக்கையாளர்களுக்கு
என்னவாக இருக்கிறது:: ?

#பதில்::

#சிறைச்சாலையாக

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இவ்வுலகம், இறைநம்பிக்கையாளர்களுக்குச் #சிறைச்சாலையாகும்; இறைமறுப்பாளர்களுக்குச் சொர்க்கச் சோலையாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 5663

///////////...

 🎈🎈கேள்வி::3⃣👇👇👇

(விடுபட்ட இடத்தை சரியான வார்த்தையை கொண்டு நிரப்புக )

____________ செய்யும் ஆண்களுக்கும், பெண்களுக்கும், அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுத்தோருக்கும் பன்மடங்காகக் கொடுக்கப்படும். அவர்களுக்கு மதிப்புமிக்க கூலி உண்டு.
..

🎈🎈 பதில்::👇👇👇

#தர்மம்

தர்மம் செய்யும் ஆண்களுக்கும், பெண்களுக்கும், அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுத்தோருக்கும் பன்மடங்காகக் கொடுக்கப்படும். அவர்களுக்கு மதிப்புமிக்க கூலி உண்டு.

திருக்குர்ஆன்  57:18

///////////////

🎈🎈கேள்வி::👇👇👇

உங்களுக்கு #முன்_சென்றவர்களை ஜானுக்கு ஜான், முழத்துக்கு முழம் நீங்கள் பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தார்கள் என்றால் நீங்களும் நுழைவீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

இதில் முன் சென்றவர்கள் என்று எவர்களை குறிப்பிட்டு நபி ( ஸல்) கூறினார்கள் ::??

 🎈🎈பதில்::👇👇👇

 #யூதர்களையும்_கிறித்துவர்களையும்

உங்களுக்கு முன் சென்றவர்களை ஜானுக்கு ஜான், முழத்துக்கு முழம் நீங்கள் பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தார்கள் என்றால் நீங்களும் நுழைவீர்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். 'அல்லாஹ்வின் தூதரே முன் சென்றவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது #யூதர்களையும்_கிறித்தவர்களையுமா?'' என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'வேறு யாரை (நான் குறிப்பிடுகிறேன்)'' என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 3456, 7319

////////////!

.🎈🎈கேள்வி:::6⃣👇👇👇

எந்த உணவில் சைத்தான்  பங்கேற்கின்றான்  :::???

#பதில்::

உணவு உண்பதற்கு முன்னால் பிஸ்மில்லாஹ் என்று கூற வேண்டும். இறைவனுடைய பெயரை கூறாமல் உணவு உட்கொண்டால் அந்த உணவில் ஷைத்தானும் பங்கேற்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்

நூல் : முஸ்லிம் (4105)

//////////////
 🎈🎈 கேள்வி::7⃣👇👇👇

தொழுகையில் இமாம் ஏதேனும் தவறு செய்து விட்டால் ஆண்கள் அதை எப்படி சுட்டிக்காட்ட வேண்டும்..?
..

🎈🎈 பதில்:::👇👇👇

ஸுப்ஹானல்லாஹ்' என்று கூறுவதன் மூலம்

நூல்கள்: புகாரீ 1218,

/////////////

🎈🎈🎈கேள்வி:::8⃣👇👇👇
 (விடுபட்ட இடத்தை சரியான வார்த்தையை கொண்டு நிரப்புக )

அவன் இரவை உங்களுக்கு ஆடையாகவும உறக்கத்தை______________,வும்,  பகலை ________________வும் படைத்தான்

🎈🎈பதில் :::👇👇👇

#ஓய்வாகவும்_இயங்குவதற்காகவும்

அவனே இரவை உங்களுக்கு ஆடையாகவும், உறக்கத்தை ஓய்வாகவும், பகலை இயங்குவதற்காகவும் அமைத்தான்.

திருக்குர்ஆன்  25:47

//////////////

🎈🎈கேள்வி:::9⃣👇👇👇

ஜிப்ரில் ( அலை) அவர்கள் நபிகளார் வழியாக அன்னை ஆயிஷா ரலி அவர்களுக்கும் ஸலாம் கூறினார்களா???

🎈🎈பதில்:::👇👇👇

ஆம்(ஸலாம் கூறினார்கள் )

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.  (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் என்னிடம், “ஆயிஷாவே! இதோ ஜிப்ரீல் உன் மீது சலாமுரைக்கிறார்” என்று கூறினார்கள். நான், “வ அலைஹிஸ் ஸலாமு வ ரஹ்முத்துல்லாஹி வ பரக்காத்துஹு - அவரின் மீதும் (அல்லாஹ்வின்) சாந்தியும் அல்லாஹ்வின் கருணையும் அவனுடைய அருள் வளங்களும் பொழியட்டும். (இறைத்தூதர் அவர்களே!) நான் பார்க்க முடியாததையெல்லாம் நீங்கள் பார்க்கிறீர்கள்” என்று கூறினேன்.  ஆயிஷா(ரலி) “நீங்கள்“ என்று நபி(ஸல்) அவர்களையே குறிப்பிட்டதாக அறிவிப்பாளர் கூறுகிறார்.
ஷஹீஹ் புகாரி: 3217

///////////

🎈🎈கேள்வி ::: 10👇👇👇

நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை சொர்க்கத்தில் நுழைய முடியாது. ஒருவரை ஒருவர் நேசிக்காமல் நம்பிக்கை கொண்டவர்களாக முடியாது. ஒரு செயலைச் செய்தால் நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிப்பீர்கள் என்று நபியவர்கள் கூறிவிட்டு ஒன்றை செய்யுமாறு போதித்தார்கள்.. நபியவர்கள் போதித்த அந்த செயல் என்ன ???

🎈🎈பதில் ::👇👇👇

#உங்களிடையே_ஸலாமை_பரப்புங்கள்_என்று_கூறினார்கள்

'நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை சொர்க்கத்தில் நுழைய முடியாது. ஒருவரை ஒருவர் நேசிக்காமல் நம்பிக்கை கொண்டவர்களாக முடியாது. ஒரு செயலைச் செய்தால் நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிப்பீர்கள். அச்செயலை நான் உங்களுக்குக் கூறட்டுமா?' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டு விட்டு 'உங்களிடையே ஸலாமைப் பரப்புங்கள்' என்றனர்.

No comments:

Post a Comment