இஸ்லாமிய வினா விடை கேள்வி பதில்
♠1. திருக்குர் ஆன் முஸ்லீம்களுக்கு
மட்டும்அருளப்பட்ட வேதமா ?
இல்லை அகில உலக மக்களுக்கும்
உண்டான வேதமா ?
♣ANS-அகில உலக மக்களுக்கும்
வழிகாட்டியாக அருளப்பட்ட வேதம் –
(68:52)
♠2. நம்முடைய பெற்றோருக்காக நாம்
எவ்வாறு துஆ செய்ய வேண்டும் என
அல்லாஹ் தன் திருமறையில்
குறிப்பிடுகிறான் ?
♣ANS-இன்னும் இரக்கம் கொண்டு பணிவு
என்னும் இறக்கையை
அவ்விருவருக்காகவும் நீ
தாழ்த்துவீராக!. மேலும் என் இறைவா
நான் சிறு பிள்ளையாக இருந்த போது
என்னை பரிவோடு அவ்விருவரும்
வளர்த்தது போல் நீயும்
அவ்விருவருக்கும் கிருபை
செய்வாயாக என்று பிரார்த்திப்பீராக.
அல் குர்ஆன் – அத்:17 வசனம் 24
♠3. அல்லாஹ்வை திக்ர் (நினைவு
கூறல்) எவ்வாறு செய்ய வேண்டும்?
♣ANS-அல்லாஹ்வை நினைவு கூறும் போது
பணிவுடனும் அச்சத்துடனும்
குறிப்பாக சொல்லில் உரத்த சப்தமின்றி
செய்யவேண்டும்.
அல் குர்ஆன் அத்:7 வசனம்:205
♠4. மார்க்கத்தை கற்று அதன்படி
செயல்படாதவர்களின் நிலையை
அல்லாஹ் எதனுடன் ஒப்பிடுகிறான் ?
♣ANS-ஏடுகளை சுமக்கும் கழுதைக்கு
ஒப்பானதாகும் அல் குர்ஆன் 62:5
♠5.
40 வயதாகும் போது ஒருவருக்காக
அல்லாஹ் துஆ செய்யச்சொல்கிறான்
யாருக்காக ?
♣ANS-பெற்றோருக்காக துஆ செய்யும் படி
இறைவன் குறிப்பிடுகிறான். (”மனிதன்
தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்
படி நாம் உபதேசம் செய்தோம்” என
ஆரம்பிக்கும் குர் ஆன் வசனமாகும்)
அல் குர்ஆன் அத்:46 வசனம்:15
♠6. சூரத்துல் யாஸீனில் 70வது
வசனத்தின் மூலம் நாம் பெறும்
விளக்கம் என்ன ?
♣ANS-”இது உயிரோடு இருப்பவர்களை
அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றது.
நிராகரிப்பவர்களுக்கு தண்டணை
உண்டு என்ற வாக்கை உண்மையென
உறுதி படுத்துகிறது” அல் குர்ஆன் –
யாஸீன் -70
♠7. இறந்தவர்கள் செவியேற்க
மாட்டார்கள் என்று கூறும் திருக்குர்
ஆன் வசனம் என்ன ?
♣ANS-நிச்சயமாக நீர் மரணித்தோரை
செவியேற்க செய்ய முடியாது.
அவ்வாறே செவிடர்களையும் அவர்கள்
புறங்காட்டி திரும்பி விடும்போது (உம்)
அழைப்பை நீ செவியேற்க செய்ய
முடியாது. 27: 80, 30:52
♠8. ஜின்களை எதற்காக படைத்தான் ?
என்பதை அல்லாஹ் திருமறையில்
ஸூரத்துத் தாரியாத்தில் எந்த
வசனத்தில் ? என்ன கூறுகிறான் ?
♣ANS-இன்னும் ஜின்களையும்
மனிதர்களையும் அவர்கள் என்னை
வணங்குவதற்காகவேயன்றி நான்
படைக்கவில்லை அல் குர்ஆன் 51:56
♠9. திருக்குர் ஆனில் தொழாதவர்களின்
நிலை என்ன என்பதை எவ்வாறு
எச்சரிக்கிறது.?
ANS-குர் ஆனில் தொழாதவர்கள் நிலை
அவர்களை நரகத்தில் கொண்டு
சேர்க்கும் என எச்சரிக்கிறது.
“குற்றவாளிகளிடம் உங்களை
நரகத்தில் சேர்த்தது எது என்று
விசாரிப்பார்கள். நாங்கள்
தொழுவோராகவும் ஏழைக்கு
உணவளிப்போராகவும் இருக்கவில்லை
எனக் கூறுவார்கள்
அத்தியாயம் 74: வசனங்கள் 41-43.
10. குர் ஆனில் பெயர் கூறப்பட்ட
வேதங்கள் எத்தனை ? எந்தெந்த
நபிமார்களுக்கு அவ்வேதங்கள்
அருளப்பட்டது.
4 வேதங்கள்
1.தாவூத் (அலை)-
ஸபூர்
2.மூஸா (அலை) – தோரா
3.ஈஸா (அலை) இன்ஜில் (பைபிள்)
4.முஹம்மது நபி(ஸல்) – அல்
குர்ஆனஇஇ
No comments:
Post a Comment