இஸ்லாமிய வினா விடை கேள்வி பதில்
♣1. அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழையும்போது என்ன செய்ய வேண்டும்?
♠விடை : இறைவனைப் போற்றிப் புகழ வேண்டும்! அவனிடம் மன்னிப்புத் தேட வேண்டும்! அவன் மன்னிப்பை ஏற்பவன்!
[திருக்குர்ஆன் - 110:3]
♣2. "அவள் கழுத்தில் முறுக்கேறிய ஈச்சமரக் கயிறு உள்ளது".
(யாருடைய கழுத்தில்?)
♠விடை : அபூலஹபுடைய மனைவியின் கழுத்தில்..
கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவனும், விறகு சுமக்கும் அவனது மனைவியும் கருகுவார்கள்.
அபூலஹப்பின் செல்வமும், அவன் செய்தவையும் அவனைக் காக்கவில்லை!
[குர்ஆன் - 111: 1,2,3,4,5]
♣3. ஹூதமா என்றால் என்ன?
♠விடை : மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு!
[குர்ஆன் - 104:6]
♣4. மண்ணறைகளைச் சந்திக்கும் வரை அதிகமாக ____ தேடுவது உங்கள் கவனத்தைத் திருப்பி விட்டது.
அ. கல்வியை
ஆ. செல்வத்தை
♠விடை : ஆ. செல்வத்தை.
மண்ணறைகளை சந்திக்கும் வரை அதிகமாக செல்வத்தை தேடுவது உங்கள் கவனத்தைத் திருப்பிவிட்டது.
[குர்ஆன் - 102:1,2]
♣5. வேதம் கொடுக்கப்பட்டோர் தமக்குத் ____ வந்த பின்பே தவிர பிளவுபடவில்லை!
அ. தீங்கு
ஆ. தெளிவானசான்று
♣6. படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள் யார்?
♠விடை : (ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும், இணை கற்பிப்போரும் நரக நெருப்பில் இருப்பார்கள். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களே "படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள்".
[குர்ஆன் - 98:6]
♣7. இறைவன் தான் உங்களுக்கு ____வை ஆடையாகவும், ____யை இளைப்பாறுதலாகவும் ஆக்கியிருக்கிறான்!
♠விடை : இரவை, நித்திரையை
இறைவன்தான் உங்களுக்கு இரவை ஆடையாகவும், நித்திரையை இளைப்பாறுதலாகவும் ஆக்கியிருக்கிறான்!
[குர்ஆன் - 25:47]
♣8. இறைவிசுவாசிகளே! இறைவனை மிக அதிகமாக ____ செய்யுங்கள்!
♠விடை : தியானம்
இறைவிசுவாசிகளே! இறைவனை மிக அதிகமாக தியானம் செய்யுங்கள்!
[குர்ஆன் - 33:41]
♣9. இறைவனிடத்தில், எல்லாக் காரியங்களையும் விட நன்மையானது விஷயம் எது?
♠விடை : பயபக்தியோடு இருப்பது..
இறைவனிடம் பயபக்தியோடு இருப்பதே எல்லா காரியங்களைவிட நன்மையானது!
[குர்ஆன் - 3:186]
♣10. ____ செய்யும் மோசத்தையும், ____ மறைத்து வைப்பதையும் இறைவன் நன்கறிவான்!
♠விடை : கண்கள், உள்ளங்கள்
கண்கள் செய்யும் மோசத்தையும், உள்ளங்கள் மறைத்து வைப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்!
[குர்ஆன் - 40:19]
Rosana binth abbas
No comments:
Post a Comment