Saturday, 19 November 2016





அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

இஸ்லாம் வினா  விடை

#கேள்வி_பதில்_தொகுப்பு 191வது

கேள்வி: 1

மக்கா வெற்றி கொள்ளப்பட்ட பின் அவ்வூராரையும் நம்பிக்கையாளரையும் அல்லாஹ் எவ்வாறு ஆக்கினான்?

பதில்:

அவன் உங்களுக்கு வெற்றி அளித்த பின் உங்கள் கைகளை அவர்களை விட்டும் அவர்கள் கைகளை உங்களை விட்டும் தடுத்தான்.

48:24

கேள்வி: 2

லூத் நபியின் சமுதாயத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டோர்கள் யார்?

பதில்:

லூத் நபியின் குடும்பத்தாரை தவிர யாரும் ஏற்றுக்கொள்ள வில்லை அவரின் மனைவியை தவிர....

51:35,36

கேள்வி: 3

போருக்கு வரதா கிராம வாசிகள் நபியிடம் வந்து என்ன கூறினார்கள் ?

பதில்:

எங்கள் செல்வங்களும் எங்கள் குடும்பங்களும் எங்களை திசை திருப்பி விட்டன. எனவே எங்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக என கூறினர்.

48:11

கேள்வி :4

அவர்கள் உண்மையில் என்ன நினைத்து போருக்கு வராமல் தங்கினார்கள்?

பதில்:

இத்தூதரும் நம்பிக்கை கொன்டோரும் தமது குடும்பத்தாரிடம் ஒரு போதும் திரும்ப வர மாட்டார்கள் என்று நினைத்தனர்.

48:11

கேள்வி: 5

போருக்கு செல்லாமல் இருப்பது யார் மீது குற்றமில்லை?

பதில்:

குருடர் மீது குற்றமில்லை நொண்டியின் மீது குற்றமில்லை நோயாளியின் மீது குற்றமில்லை.

48:17

கேள்வி: 6

நேர்வழி பெற்றோருக்கு அல்லாஹ்  எதை அதிகமாக்குகிறான். எதை வழங்குகிறான்?

பதில்:

நேர்வழியை அதிகமாக்கி தன்னை பற்றி அச்சத்தை வழங்குகிறான்.

47:17

கேள்வி: 7

நபி( ஸல்) அவர்கள் குர்ஆனை ஓதுவதை கேட்ட ஜின் கூட்டம் தம் சமுதாயதாரிடம் என்ன கூறியது? எவ்வாறு சென்றது?

பதில்:

வாயை மூடுங்கள் எனக் கூறியது . ஓதி முடிக்கப் பட்டதும் எச்சரிப்போராக தமது சமுதாயத்தாரிடம் சென்றது.

46:29

கேள்வி: 8

நிராகரிப்போரிடம் தெளிவான வசனங்களை அவர்களுக்கு கூறப்பட்டால் அவர்கள் இதை கூறுவதை தவிர வேறு ஆதாரம் சொல்லமாட்டார்கள்?

பதில்:

நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எங்கள் முன்னோர்களை கொண்டு வாருங்கள் என்று கூறுவதைத் தவிர வேறு எதுவும் அவர்களது ஆதாரமாக இல்லை.

45:25

கேள்வி: 9

அல்லாஹ்வின் உதவி கிடைக்க என்ன செய்ய வேண்டும்?  அப்படி செய்தால் அல்லாஹ் எதை உறுதிப்படுத்துகிறான்?

பதில்:

நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவினால் அவன் உங்களுக்கு உதவுவான். உங்கள் பாதங்களை அவன் உறுதிப்படுத்துகிறான்.

47:7

கேள்வி: 10

மனிதர்களில் சிலரை சிலரைவிட தகுதிகளை உயர்திருப்பது எதனால் என்று அல்லாஹ் கூறுகிறான்?

பதில்:

அவர்களில் ஒருவர் மற்றவரை பணியாளராக ஆக்குவதற்கு.

43:32

Rosana binth abbas

No comments:

Post a Comment