Saturday, 31 December 2016
இஸ்லாமிய வினா விடை
கேள்வி--»❓1
இணை வைத்தல் மற்றும் இறை மறுப்புக்கும் (முஸ்லிமான) அடியானுக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன?
பதில்--»✔ 1
#தொழுகையை_விடுவது
இணை வைத்தல் மற்றும் இறை மறுப்புக்கும் (முஸ்லிமான) அடியானுக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவதாகும்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு,
(நூல்: முஸ்லிம் 116)
கேள்வி--»❓2
யாருக்கு தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமை?
பதில் =>2
#அல்லாஹ்வை_நம்பிக்கை_கொண்டோருக்கு
நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது.
(அல்குர்ஆன் 4:103)
கேள்வி--»❓3
தொழுகை இதில் இருந்து நம்மை தடுக்கும்?
பதில்=>✔ 3
#வெட்கக்கேடான_காரியங்களை_விட்டும்_தீமையை_விட்டும்
(முஹம்மதே!) வேதத்திருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான்.
(அல்குர்ஆன் 29:45)
கேள்வி=>❓4
யாருக்கு தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
பதில்=>✔ 4
#சூரத்துல்_ஃபாத்திஹா_ஓதாதவருக்கு
''சூரத்துல் ஃபாத்திஹா ஓதாதவருக்குத் தொழுகையில்லை'' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர் : உபாதா (ரலி)
(நூல் : புகாரீ 756)
கேள்வி=>❓5
யாருக்கு தொழுகை செல்லாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
பதில்=>✔ 5
#ருகூ_சஜ்தாஹ்வை_பேணாதவர்கள்
ருகூவிலும், ஸஜ்தாவிலும் எவர் தமது முதுகை (வளைவின்றி) நேராக நிறுத்தவில்லையோ அவரது தொழுகை செல்லாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூமஸ்வூத் அல்அன்சாரீ (ரலி
(நூல் : திர்மிதீ 245)
கேள்வி=>❓6
திருடர்களில் மிகவும் மோசமான திருடன் யார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
பதில்=>✔ 6
#தொழுகையில்_திருடுபவன்
''திருடர்களில் மிகவும் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, ''அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான்?'' என நபித்தோழர்கள் கேட்டனர். ''தனது ருகூவையும் சுஜூதையும் பூரணமாகச் செய்யாதவனே அந்தத் திருடன்'' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
(நூல்: அஹ்மத் 11106)
கேள்வி=>❓7
ருகூவில் இருந்து எழுந்துவிட்டு சஜ்தாஹ் செய்யும் முறை எவ்வாறு இருக்கவேண்டும்?
பதில்=>✔ 7
#ஒட்டகம்_அமர்வது_போல்_அமர_வேண்டாம்
''உங்களில் ஒருவர் ஸஜ்தாச் செய்யும் போது தனது மூட்டுக் கால்களை வைப்பதற்கு முன் தனது கைகளை வைக்கட்டும். ஒட்டகம் அமர்வது போல் அமர வேண்டாம்.'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), (நூல்: நஸயீ 1079)
கேள்வி=>❓8
தொழுகையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்பட அது மிகவும் தகுதியான இடம் எது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
பதில்=>✔ 8
#ஸஜ்தாவில்
ஸஜ்தாவில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள்! உங்கள் பிரார்த்தனை ஏற்கப்பட அது மிகவும் தகுதியானதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
(நூல் : முஸ்லிம் 824)
கேள்வி=>❓9
ஸகர் என்ற நரகம் யாருக்காக அல்லாஹ் தயாரித்து வைத்திருக்கிறான்?
பதில்=>✔ 9
#தொழுகையாளிகளாக_இல்லாதவருக்கு
"குற்றவாளிகளிடம் உங்களை ("ஸகர்" எனும்) நரகில் நுழைவித்தது எது? எனக் கேட்பார்கள்." "அதற்கவர்கள் நாம் தொழுகையாளிகளில் இருக்க வில்லை", "மேலும் "ஏழைகளுக்கு உணவளிப்பவர்களாகவும் இருக்க வில்லை, எனக் கூறுவார்கள்." "இன்னும் நாம் (வீணானவற்றில்) மூழ்கியிருந்தோருடன் மூழ்கி இருந்தோம்".
(அல்குர்ஆன் 74: 41, 42, 43, 44,45)
கேள்வி=>❓10
சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் யார் என அல்லாஹ் கூறுகிறான்?
பதில்=>✔ 10
#சரியாக_தொழுகையை_பேணுபவர்கள்
அவர்கள் தம் தொழுகைகளை (க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள்.இத்தகையோர் தாம் சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள்
(அல் குர்ஆன் 23:9,10)
🍇Rosana binth abbas🍇
இஸ்லாமிய வினா விடை
கேள்வி 01)
இடைவெளி நிரப்புக
பஹீரா என்பது அறியாமைக் கால சிலைகளுக்காக அவற்றின் பெயரால் பால் கறக்கக்கூடாதெனத் தடை விதிக்கப்பட்டுவந்த ___________?
பதில் 01)
பஹீரா என்பது அறியாமைக் கால ஒட்டகமாகும்.
முஸ்லிம் 5486
கேள்வி 02
இடைவெளி நிரப்புக
வயிற்றுப்போக்கு உள்ளவருக்கு ________________ னில் நிவாரணம் உள்ளது?
பதில் 02)
தேன்
முஸ்லிம் 4454
கேள்வி 03)
அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள்
எந்த நோயானாலும் அதற்குக் ____________ நிவாரணம் இருந்தே தீரும்; மரணத்தைத் தவிர!
பதில் 03)
4451,4452 முஸ்லிம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எந்த நோயானாலும் அதற்குக் #கருஞ்சீரகத்தில் நிவாரணம் இருந்தே தீரும்; மரணத்தைத் தவிர! - இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
#இது_பலகீனம்மான_ஹதீஸ்
கேள்வி 04)
உடல்நலம் விசாரிக்கச் சென்றார்கள். பிறகு ”நீங்கள் குருதி உறிஞ்சி எடுத்துக்கொள்ளாத வரை நான் விடமாட்டேன். ஏனெனில்இஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதில் நிவாரணம் உள்ளது என்று சொல்வதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்!
விசாரிக்கச் சென்றவர் யார்?
நோயாளி யார்?
பதில் 04)
4433.முஸ்லிம்
(விசாரிக்கச் சென்றவர்
ஆஸிம் பின் உமர் பின் கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது
(நோயாளி)
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் முகன்னஉ பின் சினான் (ரஹ்) அவர்கள்
முஸ்லிம்
கேள்வி 05)
இடைவெளி நிரப்புக...
ஒவ்வொரு நோய்க்கும் _________ ஒன்று உண்டு. நோய்க்குரிய _________ சரியாக அமைந்துவிட்டால் _________ _________ மிக்க அல்லாஹ்வின் அனுமதியால் குணம் ஏற்படும்.
பதில் 05)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு நோய்க்கும் #நிவாரணம் ஒன்று உண்டு. நோய்க்குரிய #நிவாரணம் சரியாக அமைந்துவிட்டால்இ #வல்லமையும்_மாண்பும் மிக்க அல்லாஹ்வின் அனுமதியால் குணம் ஏற்படும்.- இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
முஸ்லிம் 4432
கேள்வி 06)
ஒரு மனிதர் நோய்வாய்ப்பட்டால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வலக் கரத்தால் அவரைத் தடவிவிட்டுப் பிறகு என்ன துஆ ஓதுவார்கள்?
பதில் 06)
அத்ஹிபில் பாஸ ரப்பந் நாஸ். வஷ்ஃபி அன்த்தஷ் ஷாஃபீ. லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக்க ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்”
(மனிதர்களைப் படைத்துப் பராமரிப்பவனே! நோயைப் போக்கி அறவே நோயில்லாதவாறு குணமளிப்பாயாக. நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை) என்று பிரார்த்திப்பார்கள்.
முஸ்லிம் 4409
கேள்வி 07)
காலையில் இந்த பழத்தை அதிகாலை உண்பதில் விஷமுறிவு உள்ளது! அது எது?
பதில் 07)
4159.முஸ்லிம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மதீனாவின்) மேட்டுப் பகுதியில் விளையும் ”#அஜ்வா” (ரகப்) #பேரீச்சம்_பழத்தை அதிகாலை உண்பதில் ”#நிவாரணம்” அல்லது ”#விஷமுறிவு” உள்ளது.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
கேள்வி 08)
உக்ல் குலத்தைச் சேர்ந்த எட்டுப்பேர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்துஇ இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக உறுதிமொழி அளித்து மதீனாவில் தங்கியிருந்தனர். அவர்களுக்கு மதீனாவின் தட்ப வெப்பநிலை ஒத்துக்கொள்ளாமல் அவர்களது உடல் நோய் கண்டது. எனவே அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அதைப்பற்றி முறையிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன மருந்து உட்கொள்ள சொன்னார்?!
பதில் 08)
3448.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ”நம் ஒட்டக மேய்ப்பருடன் ஒட்டகங்களிருக்கும் இடத்திற்குச் சென்று அவற்றின் #பாலையும்_சிறுநீரையும் பயன்படுத்தி நிவாரணம் பெற்றுக் கொள்கிறீர்களா?” என்று கேட்டார்கள்.
கேள்வி :-09)
நான் சோதிடர்கள் சூனியக்காரர்கள் கவிஞர்கள் ஆகியோரின் சொற்களைக் கேட்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் கூறிய இந்த வார்த்தைகளைப் போன்று நான் கேட்டதேயில்லை. இவ்வார்த்தைகள் ஆழ்கடலையே தொட்டுவிட்டன. உங்களது கரத்தை நீட்டுங்கள்; நான் இஸ்லாத்தை ஏற்பதற்கு உங்களிடம் உறுதிமொழி அளிக்கிறேன்” என்று கூறியவர் யார்?
அந்த வார்த்தைகளைச் சொன்னவர் யார்?
பதில் :- 09)
1576. முஸ்லிம்
”அஸ்து ஷனூஆ” எனும் குலத்தைச் சேர்ந்த #ளிமாத்_பின்_ஸஅலபா என்பார்
#அல்லாஹ்வின்_தூதர் (ஸல்) அவர்கள் ”அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. நாங்கள் அவனைப் போற்றுகிறோம்; அவனிடமே உதவி கோருகிறோம். அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்திவிட்டானோ அவரை எவராலும் வழிகெடுக்க முடியாது. அவன் யாரை வழிகேட்டில் விட்டுவிட்டானோ அவரை எவராலும் நேர்வழியில் சேர்க்க முடியாது. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையேதுமில்லை என்றும்இ முஹம்மத் அல்லாஹ்வின் அடிமையும் தூதருமாவார் என்றும் நான் உறுதி கூறுகிறேன்.
கேள்வி :
Saturday, 24 December 2016
வினா விடை " கேள்வி பதில் " தொகுப்பு151
கேள்வி⛔01
அவர்கள் நம்மிடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்தவர்கள் என்று அல்லாஹ் யாரை குறித்துக் கூருகின்றான்?
பதில்⛔01
வலிமையும், சிந்தனையும் உடைய இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகிய நமது அடியார்களை நினைவூட்டுவீராக
மறு உலகை நினைப்பதற்காக அவர்களைச் சிறப்பாக நாம் தேர்வு செய்தோம்.
குர்ஆன் 38:45,46
கேள்வி ⛔ 2
நான் உங்களைப் போன்ற மனிதன் தான். உங்கள் இறைவன் ஒரே இறைவனே என்று எனக்கு தூதுச் செய்தி அறிவிக்கப்படுகிறது எனவே அவனிடம் உறுதியாக இருங்கள் அவனிடம் மன்னிப்புத் தேடுங்கள் இணை கற்பிப்போருக்குக் கேடுதான் இருக்கிறது என்று அல்லாஹ் யாரிடம் கூறச் சொல்கிறான்?
பதில் ⛔ 2
என்று (முஹம்மதே!) கூறுவீராக!
குர்ஆன் 41:6
கேள்வி ⛔ 3
பூமியை எத்தனை நாட்களில் படைக்கப்பட்டது?
பதில் ⛔ 3
பூமியை இரண்டு நாட்களில் படைத்தான்
குர்ஆன் 41:9
கேள்வி ⛔ 4
பூமியின் மேலே முளைகளை எத்தனை நாட்களில் ஏற்படுத்தினான்?
பதில் ⛔4
நான்கு நாட்களில்
குர்ஆன் 41:10
கேள்வி ⛔5
••••நிரப்புக
••••••••••••••••••• நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று அதற்கும், பூமிக்கும் கூறினான். விரும்பியே கட்டுப்பட்டோம
பதில்⛔5
விரும்பியோ, விரும்பாமலோ
குர்ஆன் 41:11
கேள்வி ⛔6
ஏழு வானங்களை எத்தனை நாட்களில் அமைத்தான்.?
பதில்⛔6
இரண்டு நாட்களில் ஏழு வானங்களை அமைத்தான்.
குர்ஆன் 41:12
கேள்வி ⛔7
فِيهِمَا فَاكِهَةٌ وَنَخْلٌ وَرُمَّانٌ என்பதன் பொருள்??
பதில் ⛔7
அவ்விரண்டிலும் கனியும், பேரீச்சையும், மாதுளையும் உள்ளன.
குர்ஆன் 55:68
கேள்வி ⛔8
விசாரணை நாளில் வலது கையில் புத்தகம் வழங்கப்பட்டவர் எவ்வாறு இருப்பார்கள்?
பதில் ⛔8
அவர் திருப்தியான சுக வாழ்க்கையில்
உயர்ந்த சுவர்க்கத்தில் இருப்பார்.
அதன் கனிவகைகள் கைக்கு எட்டியதாக சமீபத்திலிருக்கும்.
69:21,22,23
கேள்வி ⛔9
பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமே ஆனால் அவன் என்ன கூருவான்?
பதில்⛔9
என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே என்று கூருவான்
(அல்குர்ஆன் : 69:25)
கேள்வி ⛔ 10
குற்றவாளிகளைத் தவிர வேறு எவரும் அதைப் புசித்திருக்க மாட்டார்! அது என்ன உணவு?
பதில்⛔10
சீழ் நீரைத் தவிர அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை
(அல்குர்ஆன் : 69:36)
♨💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢♨
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ★
#இஸ்லாமிய_கேள்வி_பதில்_தொகுப்பு_150வது
💜 #கேள்வி:::1⃣
அல்லாஹ்வின் எந்த இரு அருட்கொடைகளை மக்கள் நஷ்டத்திற்குள்ளாக்குகிறார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
💙 #பதில்:::👇🏻👇🏻👇🏻
‘#ஆரோக்கியம்_ஓய்வு நேரம் ஆகிய இந்த இரண்டு அருட்கொடைகளை மக்கள் நஷ்டத்திற்குள்ளாக்குகிறார்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
#புகாரி_6412)
💜 #கேள்வி:::2⃣👇🏻👇🏻
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர் களிடம் வந்து, சொர்க்கத்தையும் நரகத்தையும் கட்டாயமாகத் தேடித் தருகின்ற இரண்டு விஷயங்கள் என்னென்ன? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் என்ன பதில் கூறினார்கள். ??
💙 #பதில்::👇🏻👇🏻👇🏻
யார் அல்லாஹ்வுக்கு எதையும் #இணை_வைக்காமல_இறந்துவிடுகிறாரோ அவர் (நிச்சயமாகச்) சொர்க்கம் செல்வார். யார் அல்லாஹ்வுக்கு #இணை_வைத்தவராக_இறந்துவிடுகிறாரோ அவர் (நிச்சயமாக) நரகம் செல்வார்'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் (151)
💜 #கேள்வி::3⃣👇🏻👇🏻
அல்லாஹ்விடம் எந்தப் பாவம் மிகப் பெரியது:::??
💙 #பதில்::👇🏻👇🏻👇🏻
அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணைவைப்பது தான் (பெரும் பாவம்)'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)
நூல்: புஹாரி (4761)
💙 #கேள்வி::4⃣👇🏻👇🏻
எந்த கிழமை அன்று அல்லாஹ் தனக்கு எதையும் இணை வைக்காத ஒவ்வொரு மனிதருக்கும் மன்னிப்பு அளிக்கின்றான்.??
💙 #பதில்::👇🏻👇🏻👇🏻
ஒவ்வொரு #வியாழக்கிழமையும்_திங்கட்கிழமையும் (மனிதர்களின் அனைத்துச்) செயல்களும் (அல்லாஹ்விடம்) சமர்ப்பிக்கப் படுகின்றன. அன்றைய தினத்தில் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், தனக்கு எதையும் இணை வைக்காத ஒவ்வொரு மனிதருக்கும் மன்னிப்பு அளிக்கின்றான்
முஸ்லிம் (5014)
💙 #கேள்வி:::5⃣👇🏻👇🏻
தாயின் வயிற்றுக்குள் எத்தனை இருள்களில் வைத்து குழந்தை படைக்கப்படுகின்றது::??
💙#பதில்:::👇🏻👇🏻👇🏻
#மூன்று
அவன் உங்கள் அனைவரையும், ஆரம்பத்தில் ஒரே மனிதரிலிருந்து படைத்தான். பின்னர், அவரிலிருந்து அவருடைய மனைவியை அமைத்தான். (அந்த இருவரிலிருந்து, உங்களை ஆணும் பெண்ணுமாகப் படைத்திருக்கின்றான்.) அன்றி, (உங்களுடைய நன்மைக்காகவே) எட்டு வகை கால்நடைகளை (ஜோடி ஜோடியாகப்) படைத்திருக்கின்றான். உங்கள் தாய்மார்களின் வயிற்றில், ஒன்றன்பின் ஒன்றாக #மூன்று_இருள்களுக்குள் வைத்து உங்களை படைக்கின்றான். இந்த அல்லாஹ்வே உங்கள் இறைவன். எல்லா ஆட்சிகளும் அவனுக்கு உரியனவே. அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. ஆகவே, (அவனை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகின்றீர்கள்?
(அல்குர்ஆன் : 39:6)
💜 #கேள்வி::6⃣👇🏻👇🏻
நரகத்தின் வாசல்கள் எத்தனை::??
💜 #பதில்::👇🏻👇🏻👇🏻
#ஏழு
இப்லீஸைப் பின்பற்றுவோருக்கு எச்சரிக்கப்பட்டுள்ள) அந்நரகத்திற்கு ஏழு வாயில்கள் உள்ளன. ஒவ்வொரு வாயிலும் ஒவ்வொரு பிரிவினர்க்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
(அல்குர்ஆன் : 15:44)
💜 #கேள்வி::7⃣👇🏻👇🏻
அனைத்து நபிமார்களின் மனைவிகளுக்கும் சொர்க்கம் உண்டா::??
💜 #பதில்:👇🏻👇🏻
#இல்லை
நூஹ் உடைய மனைவியையும் லூத் உடைய மனைவியையும் அல்லாஹ் நிராகரிப்பாளர்களுக்கான உதாரணமாக எடுத்துக்காட்டுகின்றான். இவ்விருவரும் நம்முடைய இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். எனினும், அவ்விரு வரும் தத்தம் கணவருக்கு துரோகம் செய்தனர். பிறகு, அவ்விரு நல்லடியார்களும் அல்லாஹ்வுக்கு எதிராக இவர்களுக்கு எந்தப் பயனையும் அளிக்க இயலவில்லை (அவ்விருவரையும் நோக்கிக்) கூறப்பட்டது: “நரக நெருப்புக்குள் செல்வோருடன் சேர்ந்து நீங்களும் செல்லுங்கள்.”
(அல்குர்ஆன் : 66:10)
💜 #கேள்வி::8⃣👇🏻👇🏻
செய்யாத ஒன்றிற்கு பழி சுமத்தப்பட்ட மிருகம் எது?
1⃣யானை
2⃣நாய்
3⃣ஓநாய்
4⃣பசுமாடு
💙 #பதில்::👇🏻👇🏻👇🏻
#ஓநாய்
எங்கள் தந்தையே! நாங்கள் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டிருந்தோம். யூஸுஃபை எங்கள் பொருட்களின் அருகில் விட்டிருந்தோம். திடீரென்று ஓநாய் வந்து அவரைத் தின்றுவிட்டது; (இப்போது) நாங்கள் உண்மை சொல்பவர்களாய் இருந்தாலும் எங்களை நீங்கள் நம்பமாட்டீர்கள்.”
(அல்குர்ஆன் : 12:17)
💜 #கேள்வி:::9⃣👇🏻👇🏻
ஓவ்வொரு இறைத்தூதருக்கும் தம் சமுதாயத்திற்காக
பிரார்த்திக்க அங்கீகரிக்கப் பட்ட பிராத்தனை வழங்கப் பட்டுள்ளது. எனக்கு வழங்கப் பட்ட பிரார்த்தனையை இதற்காக வழங்க விரும்புகிறேன் என (யாருக்காக, எத்தகைய வாழ்விற்காக ) இறைத் தூதர் முகமது (ஸல்) கூறினார்கள் ?
💜 #பதில்:::எனக்கு வழங்கப் பட்ட பிரார்த்தனையை #மறுமையில்_என்_சமுதாயத்தாருக்குப்_பரிந்துரை_செய்வதற்காகப் பத்திரப்படுத்தவே விரும்புகிறேன் என கூறினார்கள்.
ஆதாரம் : 👉 நூல் ஸஹீஹ் புகாரீ எண்: 6304
💜 #கேள்வி::1⃣0⃣👇🏻
பெருநாள் தொழ
கேள்வி 🔒1 இறந்தவர் சார்பாக தர்மம் செய்தால் அதன் நன்மை இறந்தவருக்கு கிடைக்குமா?
பதில் 🗝
ஆம் சேரும்
ஆதாரம்:📕புகாரி 1388
********************************************
கேள்வி 2🔒
இறந்தவர் மீது ஹஜ் கடமையாகி இருந்து அதைச் செய்யாமல் அவர் மரணித்தால் அவர் சார்பில் வாரிசுகள் ஹஜ்ஜை நிறைவேற்றலாமா?
பதில் 🗝
ஆம் நிறைவேற்றலாம்.
ஆதாரம் 📕புகாரி 1852
**********************************************
கேள்வி 3🔒
இறந்தவரின் உடலை கிப்லா திசை நோக்கி தான் வைக்க வேண்டுமா?
பதில் 🗝
கிப்லா திசை நோக்கி வைக்க வேண்டும் என்று வருகின்ற ஹதீஸ் அனைத்தும் பலஹீனமான செய்திகள் எனவே
உடலை நமது வசதிக்கு ஏற்ப எந்த பக்கம் வேண்டுமானாலும் வைக்கலாம்
**********************************************
கேள்வி 4🔒
சிறுவர்களுக்கு ஜனாஸா தொழுகை கட்டாய கடமையா?
பதில்🔑
கட்டாயக் கடமை இல்லை
ஆதாரம் 📖 அபூதாவூத் 2772
நபி ஸல் அவர்கள் தமது மகன் இப்ராஹீம் 18 மாதத்தில் மரணித்த போது அவருக்கு நபி ஸல் அவர்கள் தொழுகை நடத்த வில்லை
***********************************************
கேள்வி 5🔒
கஃபனிடுதல் என்றால் என்ன?
பதில் 🗝
குளிப்பாட்டிய பின் துணியால் உடலை மறைக்க வேண்டும் இதை தான் #கஃபன் என்று மார்க்கம் கூறுகீறது,
இதை தவிர்த்து
சட்டை,உள்ளாடை,வேட்டி ,மேல்சட்டை பின்னர் உடலை மறைக்கும் துணி இப்படி இருந்தால் தான் அது கஃபன் என்று இல்லை,#கஃபன் இடுவதற்கு இப்படி எல்லாம் கட்டுபாடுகள் ஏதுமில்லை
**********************************************
கேள்வி 6🔒
தைக்கப்பட்ட ஆடையில் கஃபன் இடலாமா?
பதில் 🗝
ஆம் இடாலாம்
ஆதாரம் 📕புகாரி 1269
*******************************************
கேள்வி 7🔒
நமது கஃபனை நாமே தயார் செய்து கொள்ளலாமா?
பதில் 🗝
தயார் செயலாம்
ஆதாரம் 📕புகாரி 1378
*******************************************
கேள்வி 🔒8
ஜனாஸா தொழுகையை வீட்டில் தொழலாமா?
பதில் 🔑
ஆம் தொழலாம்
ஆதாரம் ஹாகிம் 1/519
**********************************************
கேள்வி 9🔒
ஜனாஸா தொழுகையில் பெண்கள் கலந்து கொள்ளலாமா?
பதில் 🗝
கலந்து கொள்ளலாம்
ஆதாரம் 📕புகாரி ஹாகிம் 1/519
******************************************
கேள்வி 10🔒🔒🔒
இறந்தவர் ஆணாக இருந்தால் அல்லது பெண்ணாக இருந்தால் #இமாம் எங்கு நிற்க வேண்டும் ???
பதில் 🗝🗝🗝
ஆணாக இருந்தால் உடலை குறுக்கு வசமாக வைத்து #தலைக்கு நேரகாவும்
பெண்ணாக இருந்தால் அவரது #வயிற்றுக்கு நேராகவும் இமாம் நிற்க வேண்டும்
📕புகாரி 332
📗திர்மிதி 955
★93வது "வினா_விடை" கேள்வி பதில் தொகுப்பு ★★★
💐 السلام عليكم ورحمة الله وبركاته 💐♀♂
கேள்வி- பதில் தொகுப்பு.!
கேள்வி, 1
“துணிகள் பழையதாகி விடுவது போல் உங்கள் உள்ளங்களில் உள்ள ஈமானும் பழையதாகி (பலவீனமடைந்து) விடும். எனவே, உங்கள் உள்ளங்களில் உள்ள ஈமானைப் புதுப்பிக்க அல்லாஹ்விடம் ___________ செய்து வாருங்கள்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் .
அ. திக்ரு
ஆ. துஆ
இ. பாவ மன்னிப்பு
சரியான பதில் :-
#துஆ
“துணிகள் பழையதாகி விடுவது போல் உங்கள் உள்ளங்களில் உள்ள ஈமானும் பழையதாகி (பலவீனமடைந்து) விடும். எனவே, உங்கள் உள்ளங்களில் உள்ள ஈமானைப் புதுப்பிக்க அல்லாஹ்விடம் துஆச் செய்து வாருங்கள்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( #ஹாகிம் )
கேள்வி, 2
“வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு ____________ ஆண்டுகளுக்கு முன்பே அல்லாஹ் எல்லாப் படைப்புகளின் விதிகளையும் எழுதிவிட்டான்.
அ. 50, 000
ஆ. 50, 0000
இ. 60,000
ஈ. 55,000
சரியான பதில் :-
“வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு #ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அல்லாஹ் எல்லாப் படைப்புகளின் விதிகளையும் எழுதிவிட்டான். அப்பொழுது அல்லாஹ் வின் அர்ஷ், நீரின் மீது இருந்தது’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( முஸ்லிம் )
கேள்வி, 3
யாரஸூலல்லாஹ்! திக்ருடைய சபைகளில் அமர்வதின் கூலியும், வெகுமதியும் என்ன?'' என்று நான் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம், கேட்டதற்கு, திக்ருடைய சபைகளில் அமர்வதின் கூலி ____________________! _________________!'' என பதிலளித்தார்கள்''
அ. சொர்க்கம்
ஆ. நற்ச்செயல்
இ. சிறந்தது
சரியான பதில் :-
#சொர்க்கம்
யாரஸூலல்லாஹ்! திக்ருடைய சபைகளில் அமர்வதின் கூலியும், வெகுமதியும் என்ன?'' என்று நான் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம், கேட்டதற்கு, திக்ருடைய சபைகளில் அமர்வதின் கூலி சொர்க்கம்தான்! சொர்க்கம்தான்!'' என பதிலளித்தார்கள்'' என்று ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள. (#அஹ்மத்_தப்ரானி )
கேள்வி, 4
எவர் _______________________என்று சொல்வாரோ அவருக்கு சுவனத்தில் ஒரு பேரீத்த மரம் நடப்படுகின்றது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் .
அ. சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி
ஆ. லா ஹவ்ல வ லா குவத இல்லா பில்லாஹ்
இ. லா இ லாஹ இல் அல்லாஹ்
சரியான பதில் :-
#சுப்ஹானல்லாஹி_வபிஹம்திஹி .!!!!
எவர் சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி என்று சொல்வாரோ அவருக்கு சுவனத்தில் ஒரு பேரீத்த மரம் நடப்படுகின்றது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். ( பஸ்ஸார் )
கேள்வி, 5
துஆக்களில் சிறந்தது _____________நாளன்று கேட்கும் துஆவாகும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள் .
அ. ஜும்ஆ
ஆ. அரஃபா
இ. தஹஜ்ஜீத்
ஈ. ஆஷுரா
சரியான பதில் :-
#அரஃபா
துஆக்களில் சிறந்தது அரஃபா நாளன்று கேட்கும் துஆவாகும். வார்த்தைகளில் சிறந்தது நானும் எனக்கு முன் சென்ற நபிமார்கள் (அலை) அவர்களும் சொன்ன ( لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَشَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلي كُلِّ شَيْءٍ قَدِيرٌ ) என்ற வார்த்தைகளாகும் என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( #திர்மிதி )
கேள்வி, 6
எவரது உள்ளத்தில் அணுவளவு ______________ இருக்குமோ அவர் சொர்க்கம் செல்லமாட்டார்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அ. பொறாமை
ஆ. பெருமை
இ. கோபம்
சரியான பதில் :-
#பெருமை
எவரது உள்ளத்தில் அணுவளவு பெருமை இருக்குமோ அவர் சொர்க்கம் செல்லமாட்டார்'' என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( முஸ்லிம் )
கேள்வி, 7
செல்வந்தர்களான முஸ்லிம்களைவிட ஏழை முஸ்லிம்கள் _____________வருடங்கள் முன்னதாக சுவர்க்கத்தில் நுழைவார்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் .
அ. 50
ஆ. 40
இ. 60
ஈ. 70
சரியான பதில் :-
#நாற்பது_ஆண்டு
செல்வந்தர்களான முஸ்லிம்களைவிட ஏழை முஸ்லிம்கள் நாற்பது வருடங்கள் முன்னதாக சுவர்க்கத்தில் நுழைவார்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜாபிரிப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். ( #திர்மிதீ )
கேள்வி, 8
புறம் பேசுவது __________________விட மிகக் கொடியது'' என நபி (ஸல்) அவர்கள் கூறியனார்கள் .
அ. கொலை
ஆ. விபச்சாரம்
இ. வட்டி
ஈ. திருட்டு
சரியான பதில் :-
#விபசாரத்தை_விட
புறம் பேசுவது விபச்சாரத்தைவிட மிகக் கொடியது'' என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, யாரஸூலல்லாஹ்! புறம் பேசுவது விபச்சாரத்தை
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹிம்
94வது வினா விடை கேள்வி பதில் தொகுப்பு
1)👉🏿✍🏻 question ✍🏻👇🏻
உங்களில் (முஸ்லிம்களில்) சிறந்தவர்கள் என யாரைக் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
1)👉🏿✍🏻 Answer ✍🏻👇🏻🔏
‘உங்களில் (முஸ்லிம்களில்) சிறந்தவர்கள் யார் எனில், யார் குர்ஆனைக் கற்று, (பிறருக்கும்) கற்றுத் தருகிறார்களோ அவர்கள்’ (அறிவிப்பவர் : உதுமான் (ரலி), நூல்: புகாரி
🚫🚫🚫🚫🚫🚫🚫🚫🚫🚫🚫🚫🚫🚫🚫🚫🚫🚫
2)👉�✍🏻 question ✍🏻👇🏻
குழந்தைகளின் எத்தனை வயதில் அவர்களை தொழுகைக்கு ஏவுமாறு நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள்¿?
2)👉🏿✍🏻 answer ✍🏻👇
உங்களின் குழந்தைகளுக்கு எழு வயது ஆகும் போது தொழும்படி கட்டளையிடுங்கள்: அவர்கள் பத்து வயது ஆகும் போது (தொழ மறுத்தால்) அவர்களை அடியுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவுத்)
❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌
3)👉🏿✍🏻 question ✍🏻👇🔐
ஆயிஷா (ரலி) அவாகள் மீது கூறப்பட்ட அவதூறு சம்பந்தமாக இறங்கிய குர்ஆன் வசனம் எது?
3)👉🏿✍🏻 Åñßwår ✍🏻👇🔏
{24:11 , 24:23}
எவர்கள் பழி சுமத்தினார்களோ, நிச்சயமாக அவர்களும் உங்களில் ஒரு கூட்டத்தினரே! ஆனால் அது உங்களுக்குத் தீங்கு என்று நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கு நன்மையாகும். (பழி சுமத்தியவர்கள்) ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சம்பாதித்த பாவம் (அதற்கொப்ப தண்டனை) இருக்கிறது; மேலும், அ(ப்பழி சுமத்திய)வர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்குக் கடினமான வேதனையுண்டு. (அல்-குர்ஆன் 24:11)
எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு. (அல்-குர்ஆன் 24:23)
💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢
4)👉🏿✍🏻 question ✍🏻👇🔐
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறை கூறிய நயவஞ்சகன் யார்?
4)👉🏿✍🏻 answer ✍🏻👇🔏
அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு உபை ஸலூல்
புகாரி 2661
❇❇❇❇❇❇❇❇❇❇❇❇❇❇❇❇❇❇
5)👉🏿✍🏻 question ✍🏻👇🔐
நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்தைக் கூறுக.
5)👉🏿✍🏻 Answer ✍🏻👇🏻🔏
நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்து ஒன்று தான்.
அல்லாஹும்ம ஸல்லிஅலா முஹம்மதின் வ-அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம, வ-அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலாமுஹம்மதின் வ-அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம, வ-அலா ஆலி இப்ராகீம இன்னக்க ஹமீதுன் மஜீத்
அல்லாஹ் நபி (ஸல்) அவாகள் மீது ஸலவாத் கூறுமாறு திருக்குர்ஆனில் வசனம் 33:56 ல் கட்டளையிட்ட போது, நபி தோழாகள் நபி (ஸல்) அவர்களிடம் எப்படி ஸலவாத் கூறவேணடும் என கேட்டபோது, பின் வரும் ஸலவாத்தை ஓதிக்காட்டினார்கள்.
✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳
6)👉🏿✍🏻 question ✍🏻👇🏻🔐
எந்த ஏழு நபர்களுக்கு மறுமையில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலில் இடம் கிடைக்கும்?
6)👉🏿✍🏻 answer ✍🏻👇🏻🔏
1) நீதமான ஆடசியாளர்
2) அல்லாஹ்வின் வணக்கத்திலேயே வளர்ந்த வாலிபன்
3) யாருடைய உள்ளம் அல்லாஹ்வின் பள்ளியை நினைத்த வண்ணம் இருக்கிறதோ அவர்
4) அல்லாஹ்வுக்காகவே விருப்பம் கொண்டு, சந்தித்து, பிரிந்த இருவர்
5) அழகும் அந்தஸ்தும் உள்ள பெண் தன் விருப்பத்திற்கு இணங்குமாறு அழைத்த போது, நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன் என்று கூறியவர்
6) வலக்கரம் என்ன கொடுத்தது என்று தன் இடக்கரம் அறியாத அளவுக்கு இரகசியமாக தர்மம் செய்தவர்
7) தனிமையில் அல்லாஹ்வின் அச்சத்தால் கண்ணீர் மல்க அல்லாஹ்வை நினைவு கூர்பவர். (புகாரி)
✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴
7)👉🏿✍🏻 question ✍🏻👇🏻🔐
எந்த ஐந்து கேள்விகளுக்கு விடைதராமல் மனிதன் மறுமையில் இறைவனின் நீதி மன்றத்திலிருந்து அகன்று செல்ல முடியாது என்று நபி (ஸல்) கூறினார்கள்?
7)👉🏿✍🏻 Answer ✍🏻👇🏻🔏
1) வாழ்நாளை எப்படி கழித்தான்
2) வாலிபத்தை எவ்வாறு கழித்தான்
3) எவ்வாறு செல்வத்தை ஈட்டினான்
4) அந்த செல்வத்தை எவ்வாறு செலவழித்தான்
5) அவன் அறிந்ததிலிருந்து எவ்வாறு செயல்பட்டான். (திர்மிதி)
☢☢☢☢☢☢☢☢☢☢☢☢☢☢☢☢☢☢
8)👉🏿✍🏻 question ✍🏻👇🏻🔐
‘அஸ்ரத்துல் முபஸ்ஸரா’ என்று அழைக்கப்படக் கூடக் கூடிய சுவர்க்கத்திற்கு நன்மாராயங் கூறப்பட்ட நபித்தோழர்கள் யாவர்?
8)👉🏿✍🏻 answer ✍🏻👇🏻🔏
(1) அபூபக்கர் (ரலி)
(2) உமர் (ரலி)
(3) உதுமான் (ரலி)
(4) அலி (ரலி)
(5) தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரலி)
(6) ஜுபைர் இப்னு அவ்வாம் (ரலி)
(7) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி)
(8) ஸஃது இப்னு அபீவக்காஸ் (ரலி)
(9) ஸயித் இப்னு ஜைத் (ரலி)
(10) அபூ உபைதா இப்னு அல் ஜர்ராஹ் (ரலி)
(ஆதாரம் : திர்மிதி, இப்னு மாஜா)
☣☣☣☣☣☣☣☣☣☣☣☣☣☣☣☣☣☣
9)👉🏿✍🏻 question ✍🏻👇🏻🔐
எந்த மூன்று இடங்களைத் தவிர நன்மையை நாடி பிரயாணம் செய்யாதீர்கள் என்று நபி (ஸல்
அஸ்ஸலாமு_அலைக்கும் #வரஹ்மத்துல்லாஹி #வ_பரகாத்துஹூ
"இஸ்லாம்" வினா? - விடை! குழுமத்தின் "கேள்வி - பதில்" போட்டி 98யின் தொகுப்பு ...
பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹுமானிர்ரஹீம்
💟 #கேள்வி:::1⃣👇👇👇
ரூஹுல் அமீன் என்பது யாருடைய பெயர் ::?
💟 #பதில்:::👇👇👇
#ஜிப்ரில் (அலை)
ரூஹுல் அமீன் (நம்பிக்கைக்குரிய உயிர்) என்பது ஜிப்ரீலின் பெயர் - 26:193
💟 #கேள்வி :::2⃣👇👇👇
அல்லாமுல் குயூப் என்றும் அல்லாஹ்விற்கு பெயர் இருக்கிறது
அல்லாமுல் குயூப் 👈என்பதன் அர்த்தம என்ன ::?
💟 #பதில்::👇👇👇
அல்லாஹ்வுக்கு அல்லாமுல் குயூப் (மறைவானவற்றை அறிபவன்) என்ற பெயர் - 5:109, 5:116, 9:78
💟 #கேள்வி:::3⃣👇👇👇
எவர்கள் இருவரும் அம்புகளின் மூலம் குறி பார்ப்பவர்களாக இருக்க வில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:: ?
💟 #பதில்:::👇👇👇
இப்ராஹீம் (அலை),
இஸ்மாயீல்(அலை)
புகாரி:: 4288
💟 #கேள்வி::4⃣👇👇👇
மீனின் வயிற்றுக்குள் இருந்து யூனுஸ் (அலை) அவர்கள் செய்த துஆ எது:::??
💟 #பதில்:::👇👇👇
" லாஇலாஹ இல்லா அன்த ஸுப்ஹானக இன்னீ குன்து மினல் ழாலிமீன் "
"உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்”
(21:87)
💟 #கேள்வி::5⃣👇👇👇
அன்சாரிகளை வெறுப்பது எதன் அடையாளம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:::???
💟 #பதில்:::👇👇👇
நயவஞ்சகத்தின் அடையாளம்
“ஈமான் எனும் இறைநம்பிக்கையின் அடையாளம் அன்சாரிகளை நேசிப்பதாகும். நயவஞ்சகத்தின் அடையாளம் அன்சாரிகளை வெறுப்பதாகும்“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி :: 17
💟 #கேள்வி::6⃣👇👇👇
உள்ளத்தில் கடுகளவேனும் ஈமான் உள்ளவர்களை அல்லாஹ் நரகில் இருந்து வெளியேற்றும் போது அவர்கள் எவ்வாறு(எந்த நிறத்தில்) வெளியேறுவார்கள்::??
💟 #பதில்:::👇👇👇
#கருத்தவர்களாக
(மறுமையில் விசாரணைகள் முடிந்த பின்) சொர்க்க வாசிகள் சொர்க்கத்திலும் நரக வாசிகள் நரகத்திலும் நுழைந்து விடுவார்கள். பின்னர் உள்ளத்தில் கடுகளவேனும் ஈமான் எனும் இறைநம்பிக்கை இருப்பவரை (நரகத்திலிருந்து) வெளியேற்றி விடுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடுவான். உடனே அவர்கள் கறுத்தவர்களாக அதிலிருந்து வெளியேற்றப்பட்டு “ஹயாத்“ என்ற ஆற்றில் போடப்படுவார்கள். இந்த ஹதீஸை அறிவிப்பவர்களில் ஒருவரான மாலிக், ஆற்றின் பெயர் “ஹயா“ என்று நபி(ஸல்) கூறினார்களோ என்று சந்தேகப்படுகிறார்... அவ்வாறு அவர்கள் அந்த ஆற்றில் போடப்பட்டதும் பெரும் வெள்ளம் பாயும் ஓடைக் கரையில் விதைகள் முளைப்பது போன்று பொலிவடைவார்கள். அவை வளைந்து மஞ்சள் நிறமாக இருப்பதை நீர் பார்த்ததில்லையா?“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார். (குறிப்பு:) இதே ஹதீஸை உஹைப் அறிவிக்கும்போது (ஹயா அல்லது ஹயாத் என்று) சந்தேகத்தோடு அறிவிக்காமல் “ஹயாத்“ என்னும் ஆறு என்று உறுதியாகக் குறிப்பிடுகிறார். மேலும் கடுகளவேனும் ஈமான் எனும் இறைநம்பிக்கை என்பதற்குப் பதிலாகக் கடுகளவேனும் நன்மை என்ற வார்த்தையையும் குறிப்பிடுகிறார்.
ஷஹீஹ் புகாரி ::22
💟 #கேள்வி::: 7⃣👇👇👇
உமர் ரலி அவர்கள் எந்த அளவுக்கு மார்க்கத்தை முழுமையாக பின்பற்றினார்கள் என்பதை நபி (ஸல்) அவர்களுக்கு எவ்வாறு கனவில் காட்டப்பட்டது::???
💟 #பதில்::: 👇👇👇
தரையில் இழுபடும் அளவுக்கு நீண்ட சட்டை அணிந்தவர்களாக
. “நான் உறங்கிக் கொண்டிருக்கும்போது கனவில் மக்களில் சிலரைப் பார்த்தேன். அவர்களின் மீது (பல விதமான) சட்டைகள் அணிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் என்னிடம் எடுத்துக் காட்டாப்பட்டனர். அச்சட்டைகளில் சில அவர்களின் மார்பு வரை நீண்டிருந்தன் இன்னும் சில அதற்கும் குறைவாக இருந்தன. உமர் இப்னு கத்தாப் (தரையில்) இழுபடும் அளவு (நீண்ட) சட்டை அணிந்தவர்களாக என்னிடம் எடுத்துக் காட்டப்பட்டார்கள்“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது நபித்தோழர்கள், “இறைத்தூதர் அவர்களே! (சட்டைக்கு) என்ன விளக்கம் தருகிறீர்கள்? எனக் கேட்டதற்கு “மார்க்கம்“ “ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் விளக்கம் தந்தார்கள்” என அபூ ஸயீதுல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி ::: 23
💟 கேள்வி::8⃣ 👇👇👇
அல்குர்ஆன் ஓதும் நயவஞ்சகனுக்கு எதை உதாரணமாக குறிப்பிட்டு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:::??
💟 #பதில்::: 👇👇👇
துளசி செடியை
1461. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை(ப் பார்த்தும், மனனமிட்டும்) ஓதுகின்ற இறைநம்பிக்கையாளரின் நிலையானது நாரத்தைப் பழத்தின் நிலையைப் போன்றதாகும். அதன் வாசனையும் நன்று; சுவையும் நன்று. (மற்ற நற்செயல்கள் புரிந்து கொண்டு) குர்ஆன் ஓதாமலிருக்கும் இறை நம்பிக்கையாளரின் நிலையானது, பேரீச்சம் பழத்தின் நிலையைப் போன்றதாகும். அ
Subscribe to:
Comments (Atom)