Saturday, 24 December 2016


அஸ்ஸலாமுஅலைக்கும்
வறஹமத்துல்லாஹி
வபறகாத்துஹூ 

#கேள்வி_பதில்_தொகுப்பு_186து

கேள்வி:::1

 ஹதீஜா பின்த் குவைலித் (ரலி) அவர்கள் சகோதரி பெயர் என்ன.?

பதில்::

ஹாலா (هالة)

ஆதாரம் புகாரி (3821)

கேள்வி::2

யாரை விசாரித்துக் கொண்டிருப்பவர் திரும்பிவரும்வரை சொர்க்கத்தின் கனிகளைப் பறித்துக்கொண்டிருக்கிறார்..?

பதில்:::

நோயாளியை நலம் விசாரித்துக் கொண்டிருப்பவர், திரும்பிவரும்வரை சொர்க்கத்தின் கனிகளைப் பறித்துக்கொண்டிருக்கிறார்

முஸ்லிம் (5017)

 கேள்வி:::3

யார் சொர்க்கத்தின்  குர்ஃபா வில் இருக்கிறார்..?

பதில்::

நோயாளியை நலம் விசாரிக்கச் சென்றவர் சொர்க்கத்தின் "குர்ஃபா'வில் இருக்கிறார்

குர்ஃபா' என்றால் என்ன?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "அதன் கனிகளைப் பறிப்பதாகும்'' என்று பதிலளித்தார்கள்.

5020

கேள்வி::4

நோயாக ஒருவர் நபி (ஸல்)
அவர்களிடம் கொண்டுவரப்பட்டால் அவர்களுக்காக எவ்வாறு பிரார்த்தனை செய்வார்கள் ..?

ஒரு வரி கூறினால் போதும்

பதில்::

அத்ஹிபில் பஃஸ் ரப்பந் நாஸ் இஷ்ஃபி, வ அன்த்தஷ் ஷாஃபி, லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக்க, ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்'' என்று பிரார்த்திப்பார்கள்.

பொருள்: மனிதர்களைப் படைத்துப் பராமரிப்பவனே! நோயைப் போக்கி அறவே நோயில்லாதவாறு குணமüப்பாயாக. நீயே குணமüப்பவன். உன் நிவாரணத்தை தவிர வேறு நிவாரணம் இல்லை.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி (5675)

 கேள்வி::5

யாரை அல்லாஹ் நரகத்தில் சீலும் சலமும் உள்ள இடத்தில் தங்க வைப்பான் ..?

பதில்::

யார் ஒரு முஃமினிடம் இல்லாததை கூறுவாரோ அவரை அல்லாஹ் சகதியும், நரகவாசிகளின் சீலும் சலமும் உள்ள இடத்தில் தங்க வைப்பான்

அபூதாவூத் (3123)

கேள்வி::6

மனிதனுக்கு செய்யும் பாவங்களில் தண்டனைகளிலே மிகப்பெரியது எது.?

 பதில்::

ஒரு முஸ்லிமின் மானத்தில் உரிமை இல்லாமல் வரம்பு மீறுவதுதான்

அபூதாவூத் (4233)

கேள்வி::7

எவன் மக்கள் பணத்தை அல்லது பொருட்களைத் திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகின்றானோ அவன் சார்பாக 

யார் அதனைத் திருப்பிச் செலுத்துவான்.?

அ- (அல்லாஹ் )

ஆ- (வானவர்கள்)

 பதில்::

அல்லாஹ்

எவன் மக்கன் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகின்றானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான்.

இப்னுமாஜா (2402), அஹ்மத் (8378)

கேள்வி::8

எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை ஏமாற்றி அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகின்றானோ அல்லாஹ்வும் அவனை ::?

Culu இந்த கேள்விளே விடை உள்ளது

பதில்::

எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகின்றானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர)

நூற்கள்: புகாரி (2387), இப்னுமாஜா (2402), அஹ்மத் (8378)

கேள்வி::9

எந்த நிகழ்ச்சியை  அப்வா போர் என்று கூறப்படுகிறது..?

பதில்::

மதீனா வந்த 12வது மாதத்தில் ஸஃபரில் மக்காவிற்கு மதீனாவிற்கு இடையில் உள்ள அப்வா என்ற இடத்திற்கு, குறைஷி வணிகக் குழுவை தாக்கச் சென்றார்கள். ஆனால் போர் நடக்கவில்லை. இந்த நிகழ்ச்சிக்குத் தான் அப்வா போர் என்று கூறப்படுகிறது. (பத்ஹுல் பாரி, பாகம்: 7, பக்கம்: 279)

 கேள்வி::10

எந்த நிகழ்ச்சியை புவாத் போர் என்று கூறப்படுகிறது..?

 பதில்:::

ஹிஜ்ரீ இரண்டாம் ஆண்டு ரபீவுல் அவ்வல் மாதம் குறைஷி வணிகக் குழுவைத் தாக்க புவாத் என்ற மலைக்குச் சென்றார்கள். அப்போதும் போர் நடக்கவில்லை. இந்த நிகழ்ச்சிக்கு புவாத் போர் என்று கூறப்படுகிறது. (பத்ஹுல் பாரி, பாகம்: 7, பக்கம்: 279)

No comments:

Post a Comment