Wednesday, 7 December 2016
இஸ்லாமிய வினா விடை தொகுப்பு
கேள்வி 1#
*________ உள்ளவையும், ________ உள்ளவையும் அல்லாஹ்வை துதிக்கின்றன*❓
பதில்..1#
👇👇👇👇👇👇👇👇
*வானங்களில்_உள்ளவையும்*
*பூமியில்_உள்ளவையும்*
يُسَبِّحُ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ الْمَلِكِ الْقُدُّوسِ الْعَزِيزِ الْحَكِيمِ
1. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வைத் துதிக்கின்றன. அவன் அரசன்; தூயவன்; மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
திருக்குர்ஆன் 62:1
============================
கேள்வி 2#
ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் நீ இதை சொல்லாமல் விட்டு விடாதே என்று நபியவர்கள் முஆத் ரலியிடம் கூறினார்கள்? நபியவர்கள் கூறிய அந்த துஆ என்ன?
#ஆயத்துல்குர்ஸி_அல்லாத_மற்றொரு_துஆ
பதில்..2#
👇👇👇👇👇👇👇👇
*அல்லாஹும்ம அயின்னீ அலா திக்ரிக வஷுக்ரிக வஹுஸ்னீ இபாததிக*
பொருள்: அல்லாஹ்வே! உன்னை நினைப்பதற்கும் உனக்கு நன்றி செலுத்துவதற்கும் உன்னை அழகான முறையில் வணங்குவதற்கும் உதவி செய்வாயாக! என்று ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் நீ சொல்வதை விட்டு விடாதே என நான் உனக்கு அறிவுறுத்துகின்றேன்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : முஆத் (ரலி),
நூல்கள் : அபூதாவூத் 1301, நஸயீ 1286
===================
கேள்வி 3#
உக்காழ், மஜன்னா, துல்மஜாஸ் ஆகியவை என்ன???
பதில் 3#
அறியாமைக் காலக் கடைவீதிகள்
( புகாரி 2098)
கேள்வி 4#
மஸ்ஜிதுந் நபவி இருந்த இடத்தில் முன்னர் என்ன இருந்தது???
பதில்: 4#
பேரிச்ச மரங்களும் பாழடைந்த கட்டிடங்களும் இருந்தன. (புகாரி 2106)
கேள்வி 5#
அல்லாஹ்வின் அருள் எப்போது தடுக்கப்படும்???
பதில்: 5#
தர்மம் செய்யாமல் செல்வத்தை சேமித்து வைத்திருக்கும் போது. (புகாரி 1433)
கேள்வி :6#
அநீதி இழைத்தவன் மறுமையில் என்ன சொல்லி புலம்புவான்???
பதில் :6#
இத்தூதருடன் நான் ஒரு தொடர்பை ஏற்படுத்தியிருக்க வேண்டுமே என்று புலம்புவான். (25:27)
கேள்வி : 7#
நபி (ஸல்) அவர்கள் எந்த நபித்தோழரை குறித்து நமது சமுதாயத்தின் நம்பிக்கைக்குரியவர் என்று சொன்னார்கள்???
பதில்: 7#
அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி)
(புகாரி 3744)
கேள்வி 8#
நபி (ஸல்) அவர்கள் யூதரிடத்தில் எதை அடைமானமாக வைத்தார்கள்???
பதில்: 8#
இரும்புக் கவசம் ( புகாரி 2068)
கேள்வி 9 #
பெண்களுக்குரிய அறப்போர் என்ன?
பதில் :9 #
பாவச்செயல் கலவாத ஹஜ்தான் பெண்களுக்குரிய சிறந்த அறப்போர்.
(புகாரி 2784)
கேள்வி 10#
ஒருவர் சாப்பிடும் உணவில் சிறந்தது எது???
பதில் 10#
தான் உழைத்து உண்ணும் உணவாகும் (புகாரி 2072)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment