Saturday, 24 December 2016


116வது வினா விடை கேள்வி பதில் தொகுப்பு

#கேள்வி: 1

மனிதர்கள் அலட்சியத்தோடு கவனமின்றி மறதியில் இருப்பது எது ?

#பதில்:1

கேள்வி கணக்கு நாள் 
(ஹிஸாப்)

21:1

#கேள்வி:2

அகிலத்தாரின் அருட்கொடை யார் ?

#பதில்:2

முஹம்மத் நபி

21:107

#கேள்வி:3

மனிதர்கல் சிலரை சிலரை கொண்டு  அல்லாஹ் தடுக்காதிருந்தால்  என்னவாகியிருக்கும் ?

#பதில்: 3

மாடங்களும் ஆலயங்களும். வழிப்பாட்டு தலங்களும். அல்லாஹ்வின் பெயர் கூறும் பள்ளி வாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும்.

22:40

#கேள்வி:4

விசுவாசிகளின் தந்தை என அல்லாஹ் யாரை குறிப்பிடுகிறான்?

#பதில்:4

இப்ராஹிம் நபி

22:78

#கேள்வி:5

இவர்களுக்கு இடையே அல்லாஹ் மறுமைநாளில் தீர்ப்பளிப்பான் ?

#பதில்:5

முஸ்லிம்கள்-யூதர்களும்
ஸாபியீன்கள்
கிருஸ்தவர்களும்
நெருப்பை வணங்குவோரும்
இணைகற்பித்தோரும்

22:17

#கேள்வி:6

அல்லாஹ் யாரை நேசிப்பதில்லை ?

#பதில்:6

நன்றி கெட்டவர்களையும்  துரோகிகளையும்.

22:38

#கேள்வி:7

உண்மையை பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய் என்ன ஆகிறது ?

பதில்:7

அது பொய்யை நொறுக்குகிறது உடனே பொய் அழிந்து விடுகிறது.

21:18

#கேள்வி:8

அவ்விரண்டிலும்( வானங்களிலும் பூமியிலும் ) அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் அவ்விரண்டும் என்னவாகிருக்கும் ?

#பதில்:8

சீரழிந்திருக்கும் அவர்கள் கூறுவதை விட்டு அர்ஷின் அதிபதியகிய அல்லாஹ் தூயவன்.

21:22

#கேள்வி:9

அல்லாஹ் நம்மை மன்னிக்க வேண்டும் என விரும்பினால் என்ன செய்யவேண்டும் ?

#பதில்:9

உறவினர்களுக்கு உதவி செய்ய வேண்டும் . அவர்களை மன்னிக்க வேண்டும்.

24:22

#கேள்வி:10

வானங்களுக்கும் அர்ஷுக்கும் அல்லாஹ் தான் அதிபதி என்று மக்கா காபிர்கள் நம்பினார்களா ?

#பதில்:10

நம்பினார்கள்.

சிந்திக்க மாட்டீர்களா கேட்பீராக!

23:86,87
❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣

No comments:

Post a Comment