கேள்வி::::1
கம்பு சாட்டை கயிறு இவை போன்றவைகளை ஒரு மனிதன் கண்டெடுத்தால் அதைப் பயன்படுத்தலாமா..?
பதில்:::
கம்பு, சாட்டை, கயிறு மற்றும் இவை போன்றவைகளை ஒரு மனிதன் கண்டெடுத்தால் அதைப் பயன்படுத்துவதற்கு நபியவர்கள் எங்களுக்கு அனுமதி வழங்கினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),
நூல் அபூதாவூத் 1459
கேள்வி:::2
மக்கள் வசிக்காத பாழடைந்த இடங்களில் புதையல் கண்டெடுக்கப்பட்டால் ஐந்தில் எத்தனை வரியாகச் செலுத்தப்பட வேண்டும்..?
பதில்:: 2
ஐந்தில் ஒன்று வரியாகச் செலுத்தப்பட வேண்டும்
அஹ்மத் 6396
கேள்வி:::3
மக்கள் வசிக்கும் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பொருளின் நிலை என்ன..?
பதில்::
அதை ஒரு வருடம் அறிவிப்புச் செய்ய வேண்டும் அதைத் தேடக்கூடியவன் காணப்பட்டால் ஒப்படைத்து விடுவேண்டும் இல்லையென்றால் அது உனக்குரியதாகும் என்று நபி ஸல் கூறினார்கள்.
நூல்: அஹ்மத் 6396
கேள்வி:::4
நபி ஸல் அவர்களிடம் தொங்கவிடப்பட்ட பேரீத்தம் பழங்களைப் பற்றி கேட்கப்பட்டது அதற்ககு நபி அவர்கள் என்ன கூறினார்கள் ..?
பதில்::::
ஒருவன் இரகசியமாக முடிந்து எடுத்துக் கொள்ளமால் தன்னுடைய வாயினால் அந்த இடத்திலேயே சாப்பிட்டால் அவன் மீது எந்தக் குற்றமும் இல்லை. என்று கூறினார்கள்.
அபூதாவுத் 3816
கேள்வி::::5
தொங்கவிடப்பட்ட பேரீத்தம் பழத்தில் இருந்து ஏதாவது ஒரு அளவிற்கு எடுத்துச் சென்றால் அவருக்கு அது போன்று #எத்தனை மடங்கு அபராதமும் தண்டனையும் இருக்கிறது..?
பதில்::
அது போன்று இருமடங்கு அபராதமும் தண்டனையும் இருக்கிறது
அபூதாவுத் 3816
கேள்வி:::6
யார் தானியக் களஞ்சியத்திற்கு வந்த பிறகு அதிலிருந்து ஏதாவது ஒரு அளவு திருடிச் சென்றால் அவன் திருடியது [________] மதிப்பிற்கு இருந்தால் அவனுக்குக் கைவெட்டுதல் இருக்கிறது…?.
பதில்:::
திருடியது கேடயத்தின் மதிப்பிற்கு இருந்தால் அவனுக்குக் கைவெட்டுதல் இருக்கிறது.
அபூதாவுத் 3816
கேள்வி::::7
யார் கேடயத்தின் மதிப்பை விடக் குறைவாகத் திருடுகிறாரோ அவருக்கு திருடியதின் மதிப்பைப் போன்று #எத்தனை_மடங்கு அபராதம் உண்டு என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்..?
பதில்:::
இருமடங்கு
அபூதாவூத் 3816
கேள்வி::::8
மேய்ச்சல் நிலத்திலே பாதுகாப்பாக உள்ள கால்நடைகளைத் திருடுபவனுக்கு எத்தனை மடங்கு அபராதம் உண்டு
தண்டனை என்ன?
இரு பதில்கள்👆
பதில்:::
#இருமடங்கு அபராதமும் தண்டனைக்குரிய #அடியும் உண்டு என்று கூறினார்கள்.
அஹ்மத் 6396
கேள்வி::9
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நானும் அபூபக்ரும் ____ இப்படி இருந்தோம் நானும் அபூபக்ரும் _____ இப்படிச் செய்தோம் நானும் அபூபக்ரும் _____ இங்கே சென்றோம்…?
பதில்::
பெரும்பாலான நேரங்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நானும் அபூபக்ரும் உமரும் (இப்படி) இருந்தோம்; நானும் அபூபக்ரும் உமரும் (இப்படிச்) செய்தோம்; நானும் அபூபக்ரும் உமரும் (இங்கே) சென்றோம் என்று சொல்ல நான் கேட்டிருக்கின்றேன்
புகாரி 3677
கேள்வி::10
அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களிடத்தில் மக்கள் அல்லாஹ்வின் தூதரே நீங்கள் எங்களிடத்தில் தமாஷ் செய்கிறீர்களே?
என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள்::?
பதில்::
நான் உண்மையைத் தவிர வேறெதையும் சொல்லவில்லையே என்று கூறினார்கள்.
திர்மிதி (1913)

No comments:
Post a Comment